This really really amazing melody sung by our raaja sir and also shreya has done excellent work!
I like this song the way how sir sings and i dedicate to all of my fellow raala fans..
The lyrics is also mesmerizing...
Here we go..
பாடல் : யாரும் தொடாத
படம் : அஜந்தா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, ஸ்ரேயா கோஷல்
யாரும் தொடாத ஒன்றை ஏதோ
முதல் முறை தொடுகிறதே (நாநா ந நாநா....)
என்னுள் இல்லாத ஒன்றை எதுவோ
எனக்குள் தருகிறதே (நாநா ந நாநா...)
அம்மம்மம்மம்மா என்னுள் என்ன
ஆனந்தந்தமாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
(யாரும் தொடாத ஒன்றை)
சிலு சிலு நதியலை வந்து எனை செல்லமாக தொடுதே
அது அது சுகம் தரவில்லை உயிர் தீயை தீண்டிவிடுதே
இரவினில் பகல் ஒன்று வருதே
என் நினைவில் கனவும் விழுதே
உறங்கவும் விழிக்கவும் மறந்து
என் உலகம் சுழலுகிறதே
பூமி மேலே இல்லை எந்தன் பாதம்
கைக்கெட்டும் தூரத்தில் வர்ண மேகம்
காகிதம் காகிதம் ஒன்று மெல்ல ஓவியம் ஆனது இன்று
மின்மினி மின்மினி ஒன்று புது பௌர்ணமி ஆனது இன்று
என்ன மாயம் ஓஹோ மனதை திறந்து வைத்தேன் வயதை பூட்டி வைத்தேன்
(யாரும் தொடாத ஒன்றை)
பனித்துளி பனிதுளிக்குள்ளே நான் மூழ்கிப்போனதென்ன
பறவையின் சிறகுகள் மோதி நான் மேகம் ஆனதென்ன
இதயத்தை இதயத்தை மெதுவாய்
சுற்றி நெருப்பு பந்து உருள
இலவச இணைப்புகள் அதுவாய்
சில இம்சை வந்து பரவ
யாரங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே
சொல்லாமல் சென்றாயே சுவாசம் போலே
ஐக்கிய மானது கொஞ்சம் அட பைத்தியமானது கொஞ்சம்
சொன்னது சொன்னது கொஞ்சம்
இன்னும் சொல்லிட ஏங்குது நெஞ்சம்
நீயும் நானும் ஓஹோ நடக்கும் புதிய காற்று தெறிக்கும் இசையின் ஊற்று
(யாரும் தொடாத ஒன்றை)
No comments:
Post a Comment